May 28, 2008

கொதிக்கும் எண்ணெய்


பணவீக்கம், ஏறிக்கொண்டே போகிறது விலைவாசி, இப்போது அடுத்த கத்தி இந்தியர்களின் தலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதுதான் பெட்ரோல், டிசல் விலை உயர்வு.இந்த எண்ணெய் விலை உயர்வு மீண்டும் பல அத்யாவசிய பொருட்களின் விலையை கூட்டும். திருவாளர் பொதுஜனத்தின் வயிற்றில் அடிப்பது என்று இந்தியாவின் இரு பொருளாதார மேதைகளான பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப சிதம்பரமும் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்கள்.


இதை இடது சாரிக் கட்சிகள் தொடர்ந்து கண்டிப்பதாலேயே அதை படித்த மேதாவிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் அதிலுள்ள பொருளாதார உண்மைகளை இன்று வரையில் நிதியமைச்சர் மறுக்கவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது.இதனால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 2 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்படுகிறது. அதனால் இந்த விலை ஏற்றம் அவசியம் என்கிறது மத்திய அரசு.


ஆனால் உண்மையில் பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்தால், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 90 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும், டிசல் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்தால் ஒவ்வொரு மாதமும் 360 கோடி கிடைக்கும். சமையல் காஸ் விலையை 10 ரூபாய் அதிகரித்தால் 58 கோடி கூடுதலாக கிடைக்கும்.


ஆனால் தற்போது உள்ள கலால் வரியில் ஒரு சத வீதத்தை குறைத்தால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கிடைக்கப்போகும் வருமானம் 1.380 கோடி. டிசலுக்கு விதிக்கப்படும் கலால் வரியில் 1 சதவீதத்தை குறைத்தால் ஒராண்டுக்கு 5, ஆயிடத்து 270 கோடி வருமானம்.


கச்சா எண்ணெய்க்கு தற்போது 5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்தால் ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் 699 கோடி வருமான இழப்பு மிச்சமாகும்.பெட்ரோல், மற்றும் டீசல் மீது இப்போது சுங்க வரி தற்போது 75 சதவீதமாக உள்ளது. இதையும் குறைத்தால் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் வருவாய் இழப்பு தவிர்க்கப்பட்டு, பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

தற்போது விகப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையில் 14.35-ம், ஒரு லிட்டர் டீசல் விலையில் 4.60-ம், கலால் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் இந்த குறைப்பை செய்ய மத்திய நிதியமைச்சர் தயாராக இல்லை. அவர் சொல்வதிலும் ஒரு வித நியாயம் உண்டு. இந்தியாவின் மக்கட் தொகையில் எழபது சதவீத மக்கள் வருமான வரி வரம்புக்கு கீழே தான் உள்ளார்கள். வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் நேர்மையாக வரி செலுத்துவதில்லை. இப்போது உள்ள வருமான வரி கெடுபிடிகளால், வரி கட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் வருமானத்தை மூடி மறைத்து ஒரு சம்பிரதாயமாகத்தான் வரியை கட்டுகிறார்கள். அதே நிலைதான் பெரிய வியாபார நிறுவனங்களிலும் நடக்கிறது. இது ஒரு புறமிருக்க, இந்தியாவ பாதுகாப்பு பட்ஜெட் ஒரு லட்சம் கோடியை தாண்டிவிட்டது.நிலைமை இப்படியிருக்க வருமானத்திற்கான ஒரு வழி பெட்ரோலிய பொருட்களின் மீது கைவைப்பதுதான் என்பது நிதியமைச்சரின் வாதம்.


இடது சாரிகளின் பார்வை வேறு மாதிரியானது. பங்குச் சந்தை என்பது ஒரு யூக வியாபாரம். அதில் ஒரு லட்சம் மூதலீடு செய்து பங்கை வாங்குகிற ஒருவர் அதை மறுநாளே நான்கு லட்சத்திற்கு விற்று விடுகிறார். ஆனால் இந்த பணம் கணக்கில் வராது. அது கறுப்புச் சந்தையில் புழங்கும். அந்த பணத்தை வங்கியில் செலுத்தினால் மட்டுமே அது வருமான வரியை ஈர்க்கும். அதே போல் பன்னாட்டு நிறுவங்கள், பங்குச்சந்தையில் வந்து கோடிக்கணக்கில் விளையாடுகிறார்கள். நல்ல விலை வரும்போது தங்கள் பங்கை விற்றுவிட்டு தங்கள் நாட்டுக்கு போய்விடுகிறார்கள். இந்த யூகச்சந்தையில் புழங்குகிற பல கோடி ரூபாய்களுக்கு வரியே கிடையாது. மாதச் சம்பளம் வாங்குபவருக்கு சம்பளத்திலேயே வரியை பிடித்துக் கொடுப்பது போல இங்கேயும் செய்தால், அரசுக்கு நல்ல வருமானம். ஆனால் அப்படி செய்தால், அந்நிய மூதலீடு நமக்கு வராது என்பது நிதியமைச்சரின் கவலை. இந்த நிலையில் இன்னும் ஒராண்டுக்குள் சர்வதேச கச்சா எண்ணெய் விலை 200 டாலர்களைத் தொடும்.


அதற்கும் திருவாளர் இந்தியன் தயாராக இருக்க வேண்டும்.1967க்கு முன் தமிழகத்தில் அரிசி தட்டுப்பாடு வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலம் மக்களை எலி கறி சாப்பிடச்சொன்னாராம். அதையே தான் இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். இப்போது நிதியமைச்சர் இனி மக்கள் கார் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்து, செலவை மிச்சப்படுத்துங்கள் என்று அறிவுரை சொல்லலாம். அதற்கு பிறகு நமது மாந்கர போக்குவரத்து பஸ்களில் உங்கள் பக்கத்தில் நிதியமைச்சர் அவ்ரது குடும்பம், தமிழக முதல்வரின் வாரிசுகள், ஜெயலலிதா, சசிகலா போன்ற பிரபலங்களும் உங்களோடு பயணம் செய்து சிக்கனத்திற்கு முன் உதாரணமாக திக்ழவார்கள் என்று நாம் இப்போதே பகல் கனவு காணலாம்.