May 27, 2008

ஒரு கட்சி, இரு தூதர்கள்


சமீபத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம். இவர்களுடைய சந்திப்பு ஒன்று புதிதல்ல. ஆனால் இம்முறை அவர் வந்தது பிரதமரின் தூதுவராக என்கிற செய்திகள் ஆளுங்கட்சி வட்டாரத்தில் பேச்சு. முதலில் உத்திரபிரதேசம், குஜராத், சமீபத்தில் கர்நாடகத்தில் காங்கிரஸ் படுதோல்வியை தழவியிருக்கிறது. நேரு குடும்பத்தின் கவர்ச்சி முகங்கள் களையிழந்து கொண்டிருக்கிறது. சோனியா, ராகுல் இருவருக்குமே ஈர்ப்பு சக்தி இல்லை என்பதை இந்த தேர்தல்கள் நீருபித்து விட்டன். அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சடிஸ்கர், டெல்லி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் வரப்போகிறது. இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் மண்ணை கவ்வினால், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் நிலமை பரிதாபமாகிவிடும். அதனால் அந்த நான்கு முன்பு தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டுமென்பது சோனியாவின் விருப்பம். ஆனால் பிரதமரோ இந்த ஆட்சி முழ ஐந்தாண்டுகள் நீடிக்க வேண்டுமென்று நினைக்கிறார். அவரது இந்த எண்ணத்தை தெரிவிக்கும் தூதுவராகத்தான் நிதியமைச்சர் தமிழக முதல்வரை சந்தித்தாராம். ஆனால் இம்மாதம் 28ந் தேதி மத்திய அமைச்சர் அர்ஜீன் சிங் தமிழக முதல்வரை சோனியாவின் தூதுவராக சந்திக்க இருக்கிறாராம். தேர்தலை இந்தாண்டுக்குள் நடத்த வேண்டுமென்கிற சோனியாவின் விருப்பத்தை கருணாநிதியிடம் தெரிவிப்பார் என்று தெரிகிறது.


தேர்தலில் தோல்வியை தழவினால், கட்சி தலைமையை மாற்றுவது என்பது காங்கிரஸ் கலாச்சாரம். நரசிம்ம ராவிற்கு அந்த நிலைமை வந்தது. பிறகு அவரை தூக்க போர்க்கொடி தூக்கிய சீதாராம் கேசரியின் நிலை என்ன என்பதையும் பார்த்துவிட்டோம். அந்த நிலை சோனியாவுக்கு வருவதை தடுக்க அவரது விசுவாசிகள் தீவிர திட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.நான்கு மாநில தேர்தல்களுக்கு முன்பாகவே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டுமென்பது இவர்களது முதல் செயல் திட்ட்ம்