May 25, 2008

வணக்கம்

என்னுடைய வலைப்பதிவில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இனி தொடர்ந்து செய்திகளும், நிறைய தகவல் பரிமாற்றங்களும் இருக்கும். நெல்லை மாவட்டத்தில் இருக்கும் என்னுடைய சொந்த கிராமத்திறகு சென்று வந்தேன். ஊர் மண்ணில் கால் வைக்கும்போது இருந்த சந்தோஷம் கிளம்பும்போது காணாமல் போய்விட்டது. நகரத்தின் அவசர நரகத்திற்கு வருகிறோம் என்பதே மனதில் வலியைத் தருகிறது. அமைதியும் மகிழ்ச்சியும் பணத்தில் மட்டுமே இல்லை என்பதை அந்த மனிதர்களின் இயல்பு காட்டிக்கொடுத்தது.

மீண்டும் சந்திப்போம்.