Dec 19, 2008

இடைவேளைக்கு பிறகு நான்


ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு வலைப்பின்னலுக்குள் வந்திருக்கிறேன். நடுவில் zee தொலைக்காட்சியில் தினமும் காலை 8.30லிருந்து 9 மணிவரை நானும் பத்திரிகையாளர் ஜென்ராம் அவர்களும் சேர்ந்து முதல் குரல் என்கிற அரசியல் நிகழ்ச்சி நடத்தத்துவங்கி இன்றோடு இரண்டு மாதங்கள் ஆறு நாட்கள் ஒடிவிட்டது. காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி அலுவலக அவசரத்தில் காலையில் பார்க்க முடியாமல் போகும் நேயர்களுக்காக அன்றிரவே இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

இது தவிர சனி, ஞாயிறு இரு தினங்களும் இரவு 9.30 மணிக்கு தமிழர் பார்வை என்கிற நிகழ்ச்சியின் நான் காணும் நேர்காணல்கள் ஒளிபரப்பாகிறது. அன்றாட நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி அரை மணி நேரம் என்றாலும் அதற்கான ஆயத்தங்கள் நிறையவே தேவைப்படுகிறது.

வலைப்பின்னலில் இந்த இடைவேளை கூட நான் என்னை புதுப்பித்துக் கொள்ள அல்ல இல்லாத புத்தியை இருப்பதாக நினைத்து கொஞ்சம் கூர் தீட்டிக்கொள்ள என்று நிறைய காரணங்கள் சொல்லிக்கொள்ளலாம். எது எப்படியோ மீண்டும் உள்ளே வந்துவிட்டேன். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும், நேரமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.