Jan 17, 2009

சிறைச்சாலை ஒரு கல்லூரி



`கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி’ என்று ஒரு பழைய சினிமா பாடல் உண்டு.

இப்போது நமது சிறைத்துறை பற்றி வருகிற செய்திகள், வெளியில் இருப்பதை விட உள்ளே போய்விடலாமா என்கிற ஆசையை எழப்புகிறது. தற்போதை சிறைத்துறை டிஜிபி நட்ராஜ்,எந்த வேலையை எடுத்துக்கொண்டாளும் அதை முனைப்பாக செய்யக்கூடியவர். அது மாநகர கமிஷனர் வேலையாக இருந்தாலும் சரி, மனித உரிமை கமிஷனாக இருந்தாலும் சரி, அவரை எந்த ஒரு மூலையில் தூக்கிப் போட்டாலும் அந்த மூலைக்கு ஒரு பிரகாசத்தை பாய்ச்சக் கூடியவர்.

சமீபத்தில் சிறையில் பட்டமளிப்பு விழா நடத்தினார். நேற்றைக்கு வந்த ஒரு செய்தி, சிறைக்கைதிகள் ஒரு பத்திரிகை கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த பத்திரிகைக்கு பெயர் `உள்ளொளி’. சுதந்திரமாக திரியும் மனிதன் எதையும் தெரிந்து கொள்ள, பார்க்க, மனிதர்களை சந்திக்க வாய்ப்புண்டு. ஆனால் கைதிகளில் நிலை அப்படியில்லை. ஒரு கூட்டுக்குள் இருந்து கொண்டு உலகை பார்க்க வேண்டும். மேலும் தனிமை ஒரு மனிதனை நிறைய யோசிக்க வைக்கும். உள் மனச் சோதனை செய்து கொள்ள அது அருமையான கூடம். அவர்களின் உள் மனம் பேசியதன் அச்சு வடிவம் தான் உள்ளொளி.

எத்தனை அருமையான கவிதைகள், கட்டுரைகள், ஒவியங்கள்.மெய்சிலிர்க்க வைக்கிறது. இன்னும் ஒவ்வொருவரையும் தனியே சந்தித்தால் அவர்களுக்குள் எத்தனை காவியங்கள் புதைந்து கிடக்குமோ.

அந்த `இல்ல’ வாசிகள். இப்போது அவர்களை கைதிகள் என்றழைப்பதில்லை. அவர்கள் இனி இல்ல வாசிகள்.வீடுகள் தான் கற்களால் கட்டப்படுகிறது. இல்லங்கள் இதயங்களினால் எழதப்படுவது என்பதற்கு தமிழகமெங்கும் உள்ள இந்த இல்லங்களே இனி சாட்சியாக இருக்கப்போகிறது.

No comments:

Post a Comment