Jan 16, 2009

கற்றுத் தெரிவதா காதல் ?



ஒரு செய்தி படித்தேன். வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. தெற்கு பெர்லினில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் Flirting அதாவது காதல் விளையாட்டு (இப்படித்தான் இதற்கு தமிழாக்கம் செய்திருக்கிறது சென்னை பல்கலைக்கழக அகராதி) இதை தங்களின் பாடத் திட்டத்தில் சேர்த்திருக்கிறார்களாம்.முதலில் இதைப் பார்த்தவுடன் சிரிப்பு தான் வந்தது. பிறகு யோசித்துப் பார்த்ததில் இதற்கான அவசரமும், அவசியமும் இப்போது வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த கால இளம் வயதினருக்கு காமத்தின் உந்துதல் இருக்கிறது. அது தன்னால் வருவது.ஆனால் அதைத்தான் காதல் என்று அவர்கள் தவறாக புரிந்து கொண்டு, அவசரப்பட்டு அதை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு திருமணமும் செய்து கொண்டு விடுகிறார்கள். அது மாதிரி திருமணங்கள் சேர்ந்த முப்பதாவது நாளில் விவாகரத்து வரை யோசிக்க வைக்கிறது. `கட்டிய தாலியின் மஞ்சள் காய்வதற்கு முன்பே விவாகரத்திற்கு மனு செய்து விடுகிறார்கள். திருமணமாகி ஒரு வருடங்கள் கழித்துத்தான் விவாகரத்திற்கு மனு செய்ய முடியும் என்கிறது சட்டம். இப்படியொரு சட்டம் இல்லாவிட்டால், முப்பதாவது நாளே விவாகரத்து வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள் ‘ என்கிறார் குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர்.

பாலியிலை பாடத்தில் சேர்ப்பது குறித்தே இந்தியாவில் இன்னமுன் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அயல் நாட்டு பல்கலைக்கழகங்கள் இதற்காக ஒரு பாடத் திட்டமே கொண்டு வர நினைக்கிறது.

இதை பார்க்கும்போது நமது பாரத முன்னோர்கள் எத்தனை தீர்க்க தரிசிகள் என்பதை நினைத்து பெருமை படாமல் இருக்க முடியவில்லை. எல்லா துறைகளை பற்றியும் அவர்கள் எழதி வைத்து விட்டுத்தான் போயிருக்கிறார்கள்.இன்று உலக அரசியல், ஆட்சி முறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அரிச்சுவடி சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்தான். கணித வல்லமைக்கும் நாம் தான் முன்னோடி. வான்வெளி சாஸ்திரங்களுக்கும் நாம்தான் வழிகாட்டினோம். காதல், காமத்திற்கும் இங்கு தான் தெளிவு பெற வேண்டும். இனி அரசு விழாக்களில் புத்தகங்களை பரிசாக கொடுங்கள் என்று தமிழக முதல்வர் சொல்கிறார். இனி அந்த புத்தகங்களில் வாத்ஸாயனரின் காம சூத்திரத்தையும் கொடுங்கள் என்று அவர் சொல்லலாம்.காதல் கலையை அவர் என்னமாய் எழதி விட்டு போயிருக்கிறார்.

ஆண்,பெண் உறவை முழமையாய் விவரித்த முதல் நூல் காம சூத்திரம்தான். அதற்கு முன் பலரும் எழதினார்கள்.பலவற்றையும் எழதினார்கள். சிலர் விரிவாகச் சொன்னார்கள். தெளிவாகச் சொல்லவில்லை. தெளிவாக சொல்ல நினைத்தவர்களும் கூட அதை சுருக்கமாக சொல்லிவிட்டு போனார்கள்.வாத்ஸாயனர் மட்டுமே முழமையாகவும், தெளிவாகவும் சொன்னார்.

உடலுறவு பற்றி கூட மனிதர்களுக்கு ஒரு தெளிவு இல்லை. யாருடன், எந்தச் சூழ்நிலையில், எப்படி பழக வேண்டும் என்கிற கேள்விக்கெல்லாம் விடை தருகிறது அவருடைய காம சூத்திரம்.

காமம் என்பது என்ன ?

உடல், மனம், ஆன்மா இவை ஒரு சேர அடைகிற மகிழ்ச்சி. புலன்கள் காணும் நிறைவு.

வாத்ஸாயனர் வாழ்ந்த காலம் குறித்து இன்னும் ஒரு தெளிவுக்கு வரமுடியவில்லை. அவர் சமுத்திர குப்தர் காலத்தில் வாழந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவர் ஒரு யோகி என்பது மட்டும் தெளிவு.

நீங்கள் இன்பத்தை அறிந்து கொள்ளுங்கள், அதை முறையாக பயன்படுத்தி மகிழ்ச்சி அடையுங்கள். இதைத் தவிர வேறெந்த நோக்கத்துடனும் நான் இதனை எழதவில்லை’ என்கிறார் வாத்ஸாயனர்.

ஒரு இந்துவின் வாழ்க்கை சிறந்த மூன்று குறிக்கோள்களைக் கொண்டது.

அர்த்தம், தர்மம், காமம்.

தர்மத்தின் ஒரு பகுதிதான் காமம்

`தர்மத்துடம் இணைந்துதான் காமம். அதனால் நான் காமமாய் இருக்கிறேன்’ என்று கீதையில் கிருஷ்ணன் சொன்னார்.

ஒரு கணவன் மனைவியிடம் அன்பு வைப்பது கணவனின் தர்மம்.

ஒரு வீடு அழகாய இருப்பதற்கு காரணம் பெண் தான்.

ஒரு பெண்ணின் இருப்பில்தான் வாழ்க்கை மகத்துவம் பெறுகிறது.

ராகமும், தாளமும் பிரியாத ஒரு நல்ல சங்கீதத்தைப் போல் இருப்பதுதான் கணவந் மனைவியின் உறவு.

இசையும், பரதமும் பயிற்சி இல்லாமல் வராது.

அதைப்போலத்தான் உடலுறுவும் கூட என்கிறார் வாத்ஸாயனர்.

காமம் ஒரு கலை. ஒவ்வொரு கலைக்கு ஒரு இலக்கணம் உண்டு. அதைப்போலத்தான் காமக் கலைக்கும் ஒரு இலக்கணம் உண்டு. அந்த இலக்கணத்தை முறையாகப் பயின்றால் அது ஒரு காலத்தால் அழியாத இலக்கியம் ஆகிவிடும்.

போரும், காமமும் உண்டு. இரண்டிலும் அங்கஸ்திதிகள் (postures)ஒன்றுதான். மூச்சடக்கல்,கவனத்தை ஒரு முகப்படுத்துதல் இரண்டுக்குமே தேவை.

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன விஷயங்கள் இன்றையக்கும் புதிதாய இருக்கிறது. அதற்கு காரணம் உண்டு.

`எது மக்களின் மனதை தொட்டதோ
அது காலத்தை கடந்து நிற்கும்
எது காலங்களை கடந்து நிற்க முடிகிறதோ
அது சாசுவதமாகிவிடும்’

வாத்ஸாயனர் சொன்னதை இன்றைய பாலியில் நிபுணர்கள் யாரும் மறுக்கவில்லை

`உயிர்களைப் படைத்த பிரஜாபதியில் தொடங்கி இன்று வரையிலான பாரம்பர்யத்தைக் கொண்டது நான் உரைக்கு உண்மைகள்’ என்பார் வாத்ஸாயனர்.

நந்தி தேவர், ஸ்வேதகேது,பாப்ரவ்யர் என்று பலரும் சொன்ன பாலியல் விஷயங்கள் வாத்ஸாயனரின் காம சூத்திரத்தில் உண்டு. அவர்கள் உரைத்த சாரம்தான் காம சூத்திரம்.

காமம் என்கிற கலை, அறிவியலைத் தொட்டது வாத்ஸாயனரால்தான்.

வாத்ஸாயனரைத் தொட்டுத்தான் பின்னால் கொக்கோக் முனிவர் ரதி இரகசியத்தை எழதினார். அதுதான கொக்கோக சாஸ்திரம். தமிழில் அதிவீரராம பாண்டியர் பாடினர். பதிமூன்று நூற்றாண்டுகள் கழித்துத்தான் கல்யாண மல்லர் ஆனங்க ரங்காவைப் படைத்தார். வாத்ஸாயனரின் சாயல் இல்லாமல் யாரும் எழதவில்லை. ஆனால் யாருக்குமே வாத்ஸாயனரின் தடையற்ற சிந்தனை இருக்கவில்லை. சர். ரிச்சர்ட் பர்ட்டன் (1883)யின் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

அதனால் காதலை கற்று தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அது ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சி மரத்துப் போயிருந்தால், அதை சரி செய்ய நாம் முயலுவோம். நேரமும், காலமும் அனுமதித்தார் எது காதல் என்று தொடர்ந்து பேசுவோம்.

No comments:

Post a Comment