Aug 24, 2008

ஒபாமா- வைகோ சந்திப்பு



உலகத்திலேயே இனவெறியால அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பர்கள் தான். கடந்த காலத்தில் தான் படித்த சரித்திரங்கள், நாவல்கள் மூலமாக வைகோ மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதனாலேயே ஒபாமாவை சந்திக்க வேண்டுமென்றும் முனைப்போடு அமெரிக்காவிற்கு கிளம்பினார்.

அதற்கு முன்பாகவே, கறுப்பர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள், மற்றும் ஒபாமாவின் பின்னனி எல்லாவற்றையும் தொகுத்து ஆங்கிலத்தில் `YES WE CAN' என்கிற நூலை ஒபாமாவுக்கு அனுப்பியிருந்தார். அதை அவரும் பார்த்திருந்த தகவல் வைகோவிற்கு கிடைத்திருந்தது.

அங்கு வாழம் தன் நண்பர்கள் மூலமாக அவரை சந்திக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு இருந்த நேர நெருக்கடியால், அவருடைய மனைவியைத்தான் சந்திக்க முடியும் என்று தகவல் கிடைத்தது. ஆனால் வைகோ அதற்கு உடன்ப்டவில்லை. அவரை எப்படியும் சந்தித்தே தீர வேண்டுமென்கிற உறுதியோடு இருந்தார்.

இந்த சந்திப்பு எப்படி சாத்தியமாயிற்று ?

அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பிரசாரத்திற்கு வருகிறார். அதற்கு முன்பு, அந்த ஊர் முக்கிய பிரமுகர்களை ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார். நீங்கள் அங்கு வந்தால் ஒரு நிமிடம் அவரை சந்திக்கலாம் என்று சொல்லப்பட்டது. அவரை சந்தித்துவிட முடியுமென்கிற நம்பிக்கை எனக்கு வந்தது. கூடவே எனக்கு பல படித்த சம்ப்வங்கள் நினைவுக்கு வந்தது. ஒபாமா வெற்றி பெற்றால். உலகப் புகழ் பெற்ற நாவலான ` அங்கிள் டாம்ஸ் காபின்' புத்தகத்தின் ஆசிரியர் ஹெரியட் பீச்சர் ஸ்டவ்,மேடம் ரோஸா பார்க்கிற்கு நேர்ந்த அவமானத்தால் மார்ட்டி லூதர் கிங் கறுப்பர்களுக்காக நடத்திய போராட்டமெல்லாம் வெற்றி பெற்ற நிலை வரும் என்று நினைத்துக்கொண்டேன்.

குறிப்பிட்ட நாளின் சிறிது தாமதமாகத்தான் வந்தார். என்னிடம் வந்த நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். ஏற்கெனவே நான் அனுப்பியிருந்த புத்தகத்தின் பிரதியை அவரிடம் நீட்டியபோது, ` நீங்கள் தானே வைகோ?' என்றார். நான் வியந்து போனேன். அந்த புத்தகத்தில் கையெழத்து வாங்க அவரிடம் நீட்டினேன். இடது கையால் கையெழத்துப் போட்டுக்கொண்டிருக்கும்போது, ` நீங்கள் பதவியேற்கிற நாளில், அபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங்கின கனவுகள் நிறைவேறும். உங்களுடைய வேகமும், ஈர்ப்பும்
கண்டங்களின் எல்லைகளையெல்லாம் தாண்டி டி பல கோடி மக்களின் இதயங்களையும், மனதையும் கவர்ந்து விட்டது.

நீங்கள் ஜனாதிபதியாகிற காலத்தில் அதிசயத்தக்க மாற்றங்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழவதுமுள்ள நசுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய விடியலை கொண்டுவரும் என்று நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதற்காக நான் இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறேன்' என்றேன். மகிழ்ச்சியோடு என்னை தழவிக்கொண்டார்.

ஒரு கறுப்பர் அமெரிக்காவின் அதிபராக முடியாதென்கிற பேச்சு இன்னமும் இருக்கிறேதே ?

அது தவறு. முதல் முறையாக அமெரிக்க தேர்தலில் இளைஞர்கள், இன வேறுபாடுகளை தாண்டி ஆர்வம் காட்டுகிறார்கள். எல்லா இடங்களிலும் ஒபாமாவைப் பற்றித்தான் பேச்சு. இளைஞர்களிடையெ கறுப்பு, வெள்ளை வேறுபாடில்லை. இதை நவம்பர் 4 நடைபெறும் தேர்தல் உறுதி படுத்தும்.

தமிழக தேர்தல், அரசியல் நிலவரம் குறித்து பேச நிறைய விஷயங்கள் இருந்தாலும் அதை அந்த சமயத்தில் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து அவரிடமிருந்து விடை பெற்றேன்.