Feb 25, 2011

குடும்ப கும்மாளங்கள்




குடும்ப கும்மாளங்கள்

ன் அருமை நண்பர் கோபாலரத்னம். அவருக்கு `மின்னஞ்சல் மன்னன்' என்று பட்டமே கொடுக்கலாம். வேலை மெனக்கெட்டு மின்னஞ்சல் அனுப்பித் தள்ளுவார்.அதில் அவருடைய தொடர்புகள் ஏராளம். காலையில் ` மெயிலை' திறந்தால் அவர் அனுப்பியதைப் படித்து முடிக்கவே அரை நாள் ஆகும். மிகச் சிறந்த ஆங்கில எழத்தாளர். நேரில் சந்தித்தால், ஒரு `ஜோக்' சொல்லாமல் பேச்சை ஆரம்பிக்கவே மாட்டார்.

நாவலரை முன்பு திமுகவில் `நடமாடும் பல்கலைக்கழகம்' என்பார்கள்.
கோபாலரத்னம் ஒரு `நடமாடும் நகைச்சுவை' . அவர் என்னுடைய பதிவுகளைப் படித்துவிட்டு ஒரு கேள்வி எழப்பியிருக்கிறார். அதுதான் இன்று நான் எழதுவதற்கான தூண்டில்!

`கருணாநிதி குடும்பம் போகவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை (அதை ரசிக்கிறேன்). ஆனால் இந்தக் குடும்பம் போனால் இன்னொரு குடும்பம் வந்துதானே சூறையாடப்போகிறது?' இதுதான் அவருடைய கேள்வி.

நல்ல கேள்வி. யோசித்துப் பார்த்தேன். தமிழக அரசியலை ஆட்டிப் படைப்பது கட்சிகளா ? இல்லை குடும்பங்கள்தானே!

கருணாநிதி குடும்பம்.

ஜெயலலிதா சுவீகரித்துக் கொண்ட சசிகலா குடும்பம்.

டாக்டர் ராமதாஸ் குடும்பம். ( நல்ல வேளை திருமாவளவனுக்கு குடும்பம் இல்லை)

காங்கிரஸ் குடும்பம் ஸாரி நேரு குடும்பம். இந்தியாவிலேயே பெரிய குடும்பம்.

அதன் கிளைக் குடும்பங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் விரிந்து, பரந்து கிடக்கிறது.

தமிழக காங்கிரஸை எடுத்துக் கொள்ளுங்கள். மூப்பனார் குடும்பம்,
ப. சிதம்பரம் குடும்பம், தங்கபாலு குடும்பம். கிருஷ்ணசாமி குடும்பம், அன்பரசு குடும்பம், சேலம் ராமசாமி உடையார் குடும்பம்

இதில் `சூப்பர் ஸ்டார்' கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தான்.

`புரட்சிகரமாக அரசியல் களத்தில் இறங்கிய உண்மையான புரட்சிப் புயல் இவர்தான். எல்லா தலைவர்களும் அரசியல் களத்தில் தாங்கள் ஒரு இடத்தை பிடித்தவுடன் தான் தங்கள் குடும்பத்தை வாரிசுகளை
அரசியலுக்குக் கொண்டு வருவார்கள்.

களத்திற்கு வரும்போதே மனைவி, மைத்துனர் என்று குடும்பத்தோடு வந்தார் ' என் குடும்பம்தான் தேமுதிக. இஷ்டமிருந்தால் என்னோடு இரு என்று பகிரங்கமாக வந்தவர்.

விஷயத்திற்கு வருவோம். கிராமத்தில் கேட்பார்கள். `எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?' இதுதான் நண்பர் கோபாலரத்ன கேள்வியின் அடிப்படை.

புராண ம்கிஷாசுரனின் நிகழ்கால வார்ப்பு கருணாநிதி. மிகிஷாசுரன் சிந்தும் ரத்தத்திலிருந்து இன்னொரு மகிஷாசுரன் முளைப்பான்.அதனால்
கருணாநிதி ரத்தம் சிந்திக் கொண்டே இருப்பார்.

ஜெயலலிதா விஷயத்தில், சசிகலா அப்படியல்ல. தனக்கு வேண்டுமென்றால் ரத்தம் சிந்தாமலேயே தன் ரத்த சொந்தங்களை உள்ளே கொண்டு வருவார். பிறகு அவர்கள் தூக்கியும் எறியப்படுவார்கள்.

போதுமென்கிற கட்டுப்பட்டி மனம் கருணாநிதிக்கு கிடையாது. அங்கிங்கெனாதபடி கோட்டையில் துவங்கி, கோடித் துணி விற்கிற க்டை வரையில் தன் வாரிசுகளை முதலாளியாக்கி பார்க்க துடிப்பார்.

சசிகலா கிடைக்கிற பணத்தையும், மறைமுக பதவியிலும் திளைத்து, மகிழ்ந்து திக்குமுக்காடி, புதையல் காக்கும் பூதமாக மயங்கி கிடப்பார்.

கருணாநிதி சினிமாவையே தன் குடும்பமாக்க நினைப்பார்.
தங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்குக் கூட உருப்படியான சினிமா வாங்க தெரியாதது போயஸ் குடும்பம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்காக சூறாவளி சுற்றுப் பயணம் போகும் கோபாலபுரம்.

தன் வீட்டுத் தோட்டத்து மலர்களின் மணத்தைக் கூட நுகராமல் சோம்பிக் கிடக்கும் போயஸ் தோட்டம்.

எதிர்க் கட்சியாக இருந்தாலும், அழகு தமிழால் அலங்கரிக்கப்பட்ட அராஜக அரசியல் கோபாலபுரம்.

ஆட்சியில் இருந்தால் மட்டுமே பிரகாசமாக ஜொலிக்கும் லாந்தர் விளக்கு போயஸ் தோட்டம்.
தாயத்தை தான் பெற்றுக்கொண்டு, தண்டனையை ஆ.ராசாவிற்கு வாங்கிக்கொடுப்பார்.

ஆதாயத்தை சசிகலா குடும்பத்தினர் அனுபவிப்பார்கள். தண்டனையை தோழிகளே பெற்றுக்கொள்வார்கள்.

வாரிசுகள் என்ன செய்தாலும் காக்க்கும் குணமும், இன்னும் செய்ய மாட்டார்களா என்று ஏங்குகிற பாசமலர்தான் கோபாலபுரம்.

வாரிசுகள் செய்வதற்காக வருந்தி, வாரிசில்லா நமக்கு ஏன் இந்த வாட்டம் என்று மனம் திருந்திய நிலையில் இன்று போயஸ் தோட்டம் என்று தெரிகிறது.

இந்த மன நிலை போயஸ் தோட்டத்தில் தொடர்ந்தால் நாட்டுக்கு நல்லதா என்பதை கோபாலரத்னம் போன்ற படித்த நடுத்தர அறிவிஜிவிகள் யோசிக்கட்டும்.


5 comments:

  1. யோசிக்க வைக்கும் நல்ல பதிவு.

    ReplyDelete
  2. சுதாங்கன் மீண்டும் பதிவுலகத்திற்கு வந்ததில் எனது மிகவும் மகிழ்ச்சி. நண்பர் சுதாங்கனின் பரம் ரசிகர் நான்.

    ReplyDelete
  3. karuthula udanpadu illai endralum unga ezhuthukku enrume rasigan nan vettaiya arampichuteenga pinnunga sir

    ReplyDelete
  4. [[[வாரிசுகள் செய்வதற்காக வருந்தி, வாரிசில்லா நமக்கேன் இந்த வாட்டம் என்ற மனம் திருந்திய நிலையில் போயஸ் தோட்டம் இன்று நம் கண்ணுக்குத் தெரிகிறது.]]]

    இப்போது பதிவின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது ஸார்..!

    மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே..? வேறென்ன செய்ய முடியும்..?

    ReplyDelete
  5. Sir,
    I am very much likes your criticisms and coments. What you have said is absolutely true. Let us pray for the best will come at once.
    by
    Sai.

    ReplyDelete