Apr 21, 2011

வக்கரிக்கும் வான்கோழிகள் !

தேர்தல் பரபரப்பில் புத்தகக் கடைப் பக்கம் போகவே முடியவில்லை. போனாலும் படிக்க வேண்டுமென்கிற பேராசை `பர்ஸை' புண்ணாக்கிவிடுகிறது. ஆனாலும் இந்த பேராசையை அடக்க வேண்டியதில்லை என்று பல முன்னோர்கள் சொல்லியிருப்பதால் தொடர்ந்து பேராசைப் பட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.



அதோடு நிறுத்திக்கொள்வதில்லை. இதில் படிக்க வேண்டுமென்கிற கொள்கை பரப்பு வேறு! `நான் பட்டதாரிதான் ஆனாலும் ஆங்கிலம் அதிகமாக படிக்க வராது' என்று காரணம் சொல்லி பலர் தப்பித்துக்கொள்ள பார்ப்பார்கள்.நானும் விடமாட்டேன் நீ படிக்க விரும்பும் பல புத்தகங்கள் இப்போது தமிழிலும் இருக்கிறது. என்று பட்டியலிடுவேன். இப்படி பல புத்தகங்கள் என்னால் விற்பனையாகியிருக்கிறது. இதற்காக பதிப்பாளர்களிடம் நான் ` ராயல்டி' வசூலிப்பதில்லை.



அப்படித்தான் அன்றைக்கு கடைக்குள் நுழைந்தபோது, நண்பர் திரைப்பட, நாடக எழத்தாள நண்பர் காரைக்குடி நாராயணன் என்னை காரைக்குடியிலிருந்து கைபேசியில் அழைத்தார். `பழ. கருப்பையாவின் கருணாநிதி என்ன கடவுளா?' புத்தகம் வாங்கிவிட்டிர்களா?' என்றார். இந்த தலைப்பில் அவர் தின்மணியில் கட்டுரை எழதியது எனக்குத் தெரியும். அது புத்தகமாக வந்த விஷயம் எனக்கு தெரியவில்லை.



ஒரு வித குற்ற உணர்ச்சியுடன், புத்தக கடைக்காரரிடம் கேட்டேன் ` அது வந்தவுடனேயே வேகமாக வித்துப்போச்சு' என்றார். புருவத்தை உயர்த்திக்கொண்டேன்.புத்தகம் என்ன டாஸ்மாக் சரக்கா அத்தனை வேகமாக வித்துப் போக? மனதிற்குள் ஒரு உற்சாக ஆச்சர்யம்.



உடனே படிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தில் இன்னும் கடைகளில் தேடினேன். பல இடங்களில் ஏமாற்றும். கடைசியில் அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக கடையிலேயே வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
அரசியல், தலைவர்கள், சமயம், சமூகம், மொழி, பிற என்று ஆறு தலைப்புகளில் வந்திருக்கும் 34 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.அதிமுகவின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் பழ. கருப்பையா. என்ன சிந்திக்க, எழத தெரிந்தவர்களுக்கு கூட திராவிட கட்சிகள் சீட் கொடுக்கிறதா ? என்று ஆச்சர்யபடவேண்டாம். சில சமயங்களில் அந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடந்துவிடும்.



இந்த கட்டுரைகள் எல்லாமே அவர் தினமணியிலும், துக்ளக் வார இதழிலும் எழதி நான் ஏற்கெனவே படித்தவைதான். ஆனாலும் முழமையாக படிக்கும்போது, சிந்தனை மெருகேறத்தான் செய்கிறது.
தமிழ்நாட்டு சூழலில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அவருடன் முரண்பட, அல்லது காந்த எழத்துக்களில் கவரப்படவாவது நிச்சயம் படிக்க வேண்டும். கருணாநிதி வீட்டு வாயிலில் நிற்கும் வைரமுத்து மாதிரி, கருப்பையா வீட்டு வாயிலில் கைகட்டி நிற்கிறாள் தமிழ் அன்னை. அத்தனை அற்புத நடை. சொற்பிரயோகங்கள்.



உதாரணங்கள். கட்டுரையின் தலைப்பு `எடியூரப்பாவுக்கே சிலை வைக்கலாம்'. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை கருணாநிதி திறந்து வைத்தபோது எழதியது.



`கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி பம்பாயிலும், லக்னோவிலும், சண்டீகரிலும் கால்பதிக்க முனைந்து கொண்டிருக்கிறது '


`ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் டாலிமியாவுக்குக் கல்லக்குடியில் என்ன வேலை என்று கேட்டார் கருணாநிதி. இப்போது கருணாந்திக்கு லக்னோவில் என்ன வேலை என்று கேட்கக் கூடும்தானே .....!



இன்னும் சில க்ட்டுரைகளிலிருந்து சில உதாரணங்கள்



சாதியை திருமணங்களோடு நிறுத்திக்கொண்டு, மதத்தை வழிபாட்டுத் தலங்களோடு நிறுத்திக்கொண்டு, பசியை முன்னிறுத்தி நடத்துவதுதானே முறையான அரசியல்!



இராசாசி, பெரியார், அண்ணா, காமராசர் என்று ஒவ்வொருவராக அடுத்தடுத்து போய்விட்ட நிலையில் நாடு வெறுமை அடைந்துவிட்டது! கோல மயில்கள் குதித்தாடிய நாட்டில், வ்க்கரித்த வான்கோழிகள் கொக்கரிக்கின்றன !
ஒரு கூட்டத்தின் தகுதிக்குக் குறைவான ஒருவனும் தலைவனாக முடியாது; கூட்டத்தின் தகுதிக்கு மிகமிக மேலான ஒருவனும் தலைவனாக ஏற்கப்படுவதில்லை.



காமராசர் சத்தியமூர்த்தியை அரசியல் குருவாகக் கொண்டது போல், கக்கன் வைத்தியநாத ஐயரை அரசியல் குருவாகக் கொண்டவர்! சாதி என்னும் படி வரிசையில் மேலும் கீழுமான இருவர் கை கோர்த்து நின்றதென்பது, காந்திய அரசியல் இவற்றையெல்லாம் கடந்தது என்பதை மக்களுக்கு உணர்த்தியது.



உங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படப்போவது நீங்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அடிப்படையில் அல்ல ! இவ்வலவு சொத்து வைத்திருந்து, உங்கள் பக்கத்தில் அனாதைகள் இருப்பதை அறிந்திருந்தும், ஏன் அவர்களுக்கு உதவவில்லை என்னும் கேள்விக்குத் தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்' என்கிறார் நபிகள் நாயகம்.



பூமி அல்லாவுக்குச் சொந்தம் என்னும் கருத்துக்கும் நிலம் அரசுக்கே சொந்தம் என்னும் சமதருமக் கருத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடில்லை. இரண்டிலும் நிலப்பிரபுக்கள் இல்லை !



பழைய காலத்தில் இருந்த சாதியமைப்புக்களில் ஒவ்வொரு சாதியும் தன்னை மேல் நிலைக்குத் தூக்கிக் கொள்ளப் போராடியது ! இப்போது ஒவ்வொரு சாதியும் தன்னைக் கீழ் நிலைக்கு இறக்கிக் கொள்ளப் போராடுகின்றது ! பிற்பட்டவன் மிகவும் பிற்பட்டவனாக விரும்புகிறான்; மிகவும் பிற்பட்டவனோ தாழ்த்தப்பட்ட சாதியினரோடு சேர்த்து அறிவிக்க கோருகிறான்.



1961ல் சம்பத்; 1972ல் எம்ஜிஆர்; நெருக்கடி நிலைக் காலத்தில் நெடுஞ்செழியன்: ஈழப்போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியை குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளேயாவது சனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே !



முதலவருக்கான போட்டி நடக்கப்போவதில்லை; அப்படி ஒரு வேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பது போல் இர்ருமுனைப் போட்டியாக இருக்காது" மும்முனைப் போட்டியாகவே இருக்கும்!



தயாநிதி மாறன் திமுக காரராகவே, நேடே முகங்காட்டாதி காங்கிரசால் களமிறக்கப்படுவார்! தயநிதியிடம் இல்லாத பணமா ? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும், ` போது;போதும்' என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள்!



காங்கிரசின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே ! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும் ?



திமுகவின் சார்பாகச் சிறுபொழதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரசு தீர்மானிக்கும்! தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்!
தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும் என்பது இயற்கை விதி!
அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக்க் கருணாநிதி என்ன கடவுளா ?



----இப்படி பல விஷயங்களைச் சொல்லி யோசிக்க வைக்கிறார் கருப்பையா. அது சரி இந்த புத்தகம் ஏன் இப்படி பரபரப்பாக விற்பனையாகிறது. புத்தகத்தின் தலைப்பா? அல்லது வாக்காள மக்கள் மனதில் தொக்கி நிற்கும் கேள்வியா?



விடை மே 13 கிடைக்குமென்று நினைக்கிறேன்.

Apr 16, 2011

மாறும் உலகின் மகத்துவம்























என்னவாகும் தமிழக தேர்தல் முடிவுகள், தலைவர்களும், தொண்டர்களும், தமிழக வாக்காளர்களும் ஆவலோடு, ஆர்வத்தோடு, பரபரப்போடு, பதட்டத்தோடு, கொதிப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


தங்கள் விருப்பத்தையெல்லாம், `இப்படித்தான் இருக்கும் முடிவுகள்' என்று ஆருடம் சொல்லி தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.


மாறும் என்கிற நம்பிக்கை


மாறக்கூடாது என்கிற எதிர்பார்ப்பு.


இரண்டும்தான் இப்போது தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.


அடித்ததை பாதுகாக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.


இனியும் அடிக்கவிடக்கூடாது என்பது நம்பிக்கை.


மாற்றம் எனது மானிட தத்துவம்


மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்'


என்றார் கவியரசு கண்ணதாசன்.


நானும் அதை அறிவேன். 1967ம் ஆண்டில் தமிழகத்தில் பதிவான் வாக்குகள் 76 சதவிதத்திற்கு மேல்.அதற்கு இப்போதுதான் 78 சதத்தை தொட்டிருக்கிறது.


`இவர்கள் இருந்துவிட்டு போகட்டுமே' என்று மக்கள் நினைத்திருந்தால் வீட்டிலேயே இருந்திருப்பார்கள். வெளியே வந்திருக்கமாட்டார்கள்.


வெளியே மாசு படிந்த சூழல் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. `மாசு கட்டுப்பாட்டு வாரியம்' மாதிரி மக்கள் கிளம்பி வெளியே வந்திருக்கிறார்கள்.


இந்த எழச்சியின் விளைவுகள் என்னவாகும் என்பது தலைவர்களுக்குத் தெரியும். மேலே சொன்ன எதிர்பார்ப்பு, நம்பிக்கை அணித்தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போகும்.


நம்பிக்கை வீண்போகாது.


இதுதான் என் கணிப்பு.


காரணம் நான் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.





Apr 12, 2011

ராபர் க்ளைவ்வும், கருணாநிதியும் !

ராபர்ட் க்ளைவ் நாளை நான் வாக்களிக்கப்போகிறேன். நீங்களும் அதை செய்வீர்கள், செய்ய வேண்டும்.உங்கள் ஒரு நாள் அதிகாரத்தை நீங்கள் நழவ விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடிமை சாசனத்தில் கையெழத்திட்டுவிட்டிர்கள் என்றுதான் பொருள். அதற்கு முன் என் வலைப்பதிவில் வாக்காளர்களுக்கு என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பெங்களூரிலிருந்து என் எழத்தாள நண்பர் அமுதவன் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரது இணையதளத்தில் ` கருணாநிதியா ? ஜெயலலிதாவா ? என்கிற தலைப்பில் அவர் எழதியதைப் பார்க்க சொல்லியிருந்தார். அமுதவன் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவன் நான். ஒழக்கமான எழத்திற்கும், வாழ்க்கைக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட ஒரு மன ஒழக்கம் இருப்பதால்தான் அவர் இன்றைய தமிழக தேர்தல் களத்தை சித்தாந்த ரீதியாக அலசியிருக்கிறார். எனக்கு சித்தாந்த அறிவைவிட, யதார்த்த அனுபவம் கொஞ்சம் உண்டு. காரணம் அடிப்படையில் நான் ஒரு செய்தியாளன். தமிழகத்து தலைவர்களுக்கு என்னைத் தெரியும்.நண்பர் அமுதவனைப் போல படைப்பாற்றல் மிக்க எழத்தாளனில்லை நான். இந்த தேர்தல் என்பது கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் நடக்கும் போட்டி என்று தமிழக மக்கள் நினைக்கவில்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கும், தமிழக வாக்காள குடும்பங்களுக்கும் நடக்கும் போட்டி. என் இணையதளத்தில் நான் மார்ச் 14 2011ல் `தமிழகத்தில் நடக்கப்போவது தேர்தலா > சுதந்திரப்போராட்டமா என்று எழதியிருந்தேன். அதுதான் உண்மை. அன்று பிரிட்டிஷின் ராப்ர்ட் க்ளைவ், இன்று கலைஞர் கருணாநிதி. 1725ல் இங்கிலாந்தில் பிறந்த க்ளைவிற்கு படிப்பு ஏறவில்லை. ஆனால் இலக்கிய நடையும், பேச்சுத்திறனும் இருந்தது. 1924ல் திருக்குவளையில் பிறந்த கலைஞருக்கும் இந்த இரண்டு திறன்களும் உண்டு. ராபர்ட் க்ளைவ்வைப் பற்றி குறிப்பு ஒன்றில் ` கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரர், நிர்வாகி, அவர்தான் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் வருவதற்கு காரணமாக இருந்தார்’ என்கிறது. கலைஞரும், ஆரம்ப நாட்களில் அண்ணா போர்படையின் செயல்வீரர், நிர்வாகி. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்திய ராபர்ட் க்ளைவ், சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஏராளமான சொத்துக்களை சேர்த்துக் கொண்டார். இதுவும் கலைஞர் கருணாநிதிக்கு பொருந்தும். இதே ரீதியில் ஒப்பிட்டால் கலைஞரை நவீன ராபர்ட் க்ளைவ் என்றே சொல்லலாம்.ஆனால் இருவருக்கும் வேறுபாடுகள் நிறையவே உண்டு. ராபர்ட் க்ளைவ், அல்லது அதற்குப் பிறகு நம்மை ஆண்ட பிரிட்டிஷாரோ தங்களுக்கு நம்பிக்கையாக இருந்தவர்களை அழித்ததில்லை. ஆனால், கலைஞர் விஷயமே வேறு. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்குப் போகும்போதும், அந்த ஊரிலிருந்த, தன்னோடு பழகிய பழைய திமுக நண்பர்களின் பெயர்களையெல்லாம் கண்ணீர் மல்க பட்டியிலிட்டார்'. உதாரணம் மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டம். மதுரையின் முன்னாள் மேயர் முத்து, பிடிஆர் பழனிவேல் ராஜன், கமபம் ராஜாங்கம், காவேரிமணியம், கம்பம் நடராஜன், போடி முத்துமனோகரன், மதுரை கிருஷ்ணன் ( இவர் தான் அழகிரியின் ஆட்களால் கொல்லப்படதாக வழக்குத் தொடரப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருஷ்ணன். இவரது இனிஷியலை சொன்னால் பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்துவிடுமாம். அதனால் அவர் சொல்லவில்லை).எஸ்.எஸ். தென்னரசு. கலைஞர் கருணாநிதி பட்டியலிட்ட அவர்களின் இன்றைய நிலை என்ன? மதுரை முத்துவின் குடும்பம் இந்தியாவிலேயே இல்லை. பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஒரே மகனும் இப்போது அமெரிக்காவில்!.மதுரை எம்ஜிஆரின் கோட்டையாக இருந்தபோது, அங்கே திமுகவின் படைவீரராக இருந்தவர் காவேரிமணியம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டபோது, அவரை தன் பிள்ளையாக பார்த்துக்கொண்டவர் காவேரிமணியம். அவர் இறந்தபின், அவரது மனைவியும், பிள்ளையும் அழகிரியைப் பார்க்கக் கூட தவம் கிடந்த கதையை மதுரை மக்கள் நன்கு அறிவீர்கள். தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம், அவரது வாரிசுகள் அரசியலுக்கு வராமல் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். இப்படி ஒரு மாவட்டத்திலும், அவர் பட்டியலிட்ட முன்னாள் திமுகவினருக்குப் பின்னால் பல சோக கதைகள் உண்டு. .தங்களுக்கு உழைத்தவர்களுக்கு சொத்தும், பரிசும் கொடுத்து மகிழ்ந்தது பிரிட்டிஷ் அரசு.
ஆனால் இன்றைய `க்ளைவ்’ சாம்ராஜ்யத்தில் கட்சிக்காக பல வ்ருடங்கள் மாடாக உழைத்த உடன்பிறப்புக்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது. ஆனால் திமுகவிலிருந்து, அதிமுகவிற்குப் போய் அங்கேயும் பதவி சுகம் அனுபவித்து அவர்கள் மீண்டும் திமுகவிற்கு வந்தால் அவர்களுக்குத்தான் பதவி. உதாரணம், தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன், எ.வ.வேலு,அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வகணபதி, அங்கே அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷணன், கருப்பசாமிபாண்டியன், ஜெகத்ரட்சகன் இவர்கள்தான் கலைஞரின் சொத்துக்களுக்கும், அன்புக்கும் பாத்திரமானவர்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் சொத்துக்கள் பத்திரமாக இருந்தன. போகும்போது கூட அதை அவர்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை. குறிப்பாக இந்தியா விவசாய நாடு, அதன் வளங்கள் மிகவும் முக்கியம் என்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள். அதனால் விவசாய நிலங்களையும், விவசாயப் பயிர்களையும் பாதுகாத்தார்கள்.


நம்முடைய க்ளைவ் ராஜ்ஜியத்தில் நடப்பது என்ன ? தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளை நிலன்களும், வெள்ளாமையும் அழிக்கப்படுகின்றன.அதிலே அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், தனியார் மருத்துவ, பொறியியற்க் கல்லூரிகள் இவையெல்லாமே அந்தந்த மாவட்ட திமுக அமைச்சர்களுக்கு, அவர்களது பினாமிகளுக்கும் சொந்தம். மாவட்டங்களில் குடியிருப்புக்களும், நிலங்களையும் மிரட்டியே வளைத்துப் போட்டுக் கொண்டதை மக்கள் கண்ணீரோடு பார்க்கிறார்கள்.

மதுரை அருகேயுள்ள சீவ்ரக் கோட்டையில் அழகிரியின் மனைவி காந்தி பெயரில் எழம்பி வரும் கல்லூரி விளைநிலத்தில் அல்லவா வளர்ந்து நிற்கப்போகிறது.


5,000 வருட உலக சரித்திரத்தில், ரோமானியர்களைத் தவிர யாரும் விவசாய, வெள்ளாமை கூறுகளை அழித்ததாக வரலாறே இல்லை. அதிலும் வரலாற்று நாயகர் கலைஞர்தான்.


பிரிட்டிஷ் ஆட்சிக்கு கப்பம் கட்ட மறுத்ததினால்தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்கு. கப்பம் கட்டி விசுவாசமாக இருந்த குறுநில மன்னர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி தொந்தரவு கொடுக்கவில்லை. ஆனால், இன்று மக்களை மிரட்டி அல்லவா அவர்களது சொத்துக்கள் திமுக களவீரர்களால் ஆக்ரமிக்கப்படுகிறது.

உதாரணம் திருச்சி. அங்கே அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்குகிறார்கள். மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், வாடகைக்கு கூட வீடு கிடைக்காது. காரணம் இவர்களே எல்லா வீடுகளையும் வாங்கி வணிக வளாகங்களை கட்டி விடுவார்கள் என்று மக்கள் பயத்தில் இருக்கிறார்கள்.


`சதி’ என்கிற பெயரில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் பழக்கம் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் இருந்தது. இதை ராஜாராம் மோகன் ராய் எதிர்த்தபோது, அதற்கு தடை போட்டு பெண்களின் வாழம் உரிமையை நிலைநாட்டியது வெள்ளைக்கார அரசு.

ஆனால், இவர்களது ஊடகங்களின் காட்டப்படும் பெண்களின் நிலை இன்று என்ன ? படி தாண்டுகிற பத்தினிகள்தானே இன்று இவர்களின் நெடுந்தொடர் கதாநாயகிகள். பல குடும்பபெண்கள் இந்த நெடுந் தொடர்களைப் பார்த்து மனநோயாளியாகிப் போவதுதானே உண்மை.

ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள். ஆனால் நம் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை. இன்று அத்தனை கலாச்சார சீர்கேடுகளுக்கும் பிரச்சாரம் இவர்களது ஊடகங்கள் வாயிலாகத்தானே நடக்கிறது. சினிமா, ரிகார்ட் டான்ஸ் தவிர, அறிவு பூர்வமான நிகழ்ச்சியை இந்த ஊடகங்களின் பார்க்க முடியுமா ?


இன்னும் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் இது தமிழ்நாட்டு வாக்காள குடும்பங்களின் அன்றாட பிரச்னை, பீதி.

இந்தக் கொடுமைகளுக்கு மாற்று சக்தி ? கடலில் முழ்குகிறவன் எதையாவது பற்றிக்கொள்ளத்தான் துடிப்பான். அந்த `பற்று’தலுக்கான ஒரு கருவிதான் அதிமுக.

இங்கே கலைஞர் குடும்பம் என்றால், அங்கே சசிகலா குடும்பம் என்று ஒப்பிடலாம்.

சசிகலா குடும்பம் விற்பவர்களின் பொருடகளைத்தான் வாங்குவார்கள்.

கலைஞர் குடும்பம் விற்க விரும்பாதவர்களின் பொருடகளையும் சொத்துக்களையும், மிரட்டியே வாங்குவார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில், அடுத்தவர்கள் தொழில்களில் தலையிடமாட்டார்கள். அதற்கான புத்தியோ, சாதுர்யமோ அவருடனிருப்பவர்களுக்கு கிடையாது, தெரியாது.

தங்களைத் தவிர யாரும், எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்பதுதான் கலைஞர் குடும்பத்தின் தரக மந்திரம்.

இந்த தேர்தலில் இனவாதம், எம்ஜிஆர் அபிமானிகள், இலங்கை விவகாரம், 2 ஜி இதைப் பற்றியெல்லாம் திருவாளர் பொதுஜனத்திற்கு கவலையில்லை.

இனியும் திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகத்தில் இருப்பது பாதுகாப்பா? அல்லது வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்துவிடலாமா என்பதுதான் தமிழக வாக்காளர் மனதில் இன்றுள்ள கேள்வி.

ராபர் க்ளைவ்வும், கருணாநிதியும் !

ராபர்ட் க்ளைவ் நாளை நான் வாக்களிக்கப்போகிறேன். நீங்களும் அதை செய்வீர்கள், செய்ய வேண்டும்.உங்கள் ஒரு நாள் அதிகாரத்தை நீங்கள் நழவ விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடிமை சாசனத்தில் கையெழத்திட்டுவிட்டிர்கள் என்றுதான் பொருள். அதற்கு முன் என் வலைப்பதிவில் வாக்காளர்களுக்கு என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பெங்களூரிலிருந்து என் எழத்தாள நண்பர் அமுதவன் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரது இணையதளத்தில் ` கருணாநிதியா ? ஜெயலலிதாவா ? என்கிற தலைப்பில் அவர் எழதியதைப் பார்க்க சொல்லியிருந்தார். அமுதவன் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவன் நான். ஒழக்கமான எழத்திற்கும், வாழ்க்கைக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட ஒரு மன ஒழக்கம் இருப்பதால்தான் அவர் இன்றைய தமிழக தேர்தல் களத்தை சித்தாந்த ரீதியாக அலசியிருக்கிறார். எனக்கு சித்தாந்த அறிவைவிட, யதார்த்த அனுபவம் கொஞ்சம் உண்டு. காரணம் அடிப்படையில் நான் ஒரு செய்தியாளன். தமிழகத்து தலைவர்களுக்கு என்னைத் தெரியும்.நண்பர் அமுதவனைப் போல படைப்பாற்றல் மிக்க எழத்தாளனில்லை நான். இந்த தேர்தல் என்பது கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் நடக்கும் போட்டி என்று தமிழக மக்கள் நினைக்கவில்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கும், தமிழக வாக்காள குடும்பங்களுக்கும் நடக்கும் போட்டி. என் இணையதளத்தில் நான் மார்ச் 14 2011ல் `தமிழகத்தில் நடக்கப்போவது தேர்தலா > சுதந்திரப்போராட்டமா என்று எழதியிருந்தேன். அதுதான் உண்மை. அன்று பிரிட்டிஷின் ராப்ர்ட் க்ளைவ், இன்று கலைஞர் கருணாநிதி. 1725ல் இங்கிலாந்தில் பிறந்த க்ளைவிற்கு படிப்பு ஏறவில்லை. ஆனால் இலக்கிய நடையும், பேச்சுத்திறனும் இருந்தது. 1924ல் திருக்குவளையில் பிறந்த கலைஞருக்கும் இந்த இரண்டு திறன்களும் உண்டு. ராபர்ட் க்ளைவ்வைப் பற்றி குறிப்பு ஒன்றில் ` கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரர், நிர்வாகி, அவர்தான் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் வருவதற்கு காரணமாக இருந்தார்’ என்கிறது. கலைஞரும், ஆரம்ப நாட்களில் அண்ணா போர்படையின் செயல்வீரர், நிர்வாகி. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்திய ராபர்ட் க்ளைவ், சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஏராளமான சொத்துக்களை சேர்த்துக் கொண்டார். இதுவும் கலைஞர் கருணாநிதிக்கு பொருந்தும். இதே ரீதியில் ஒப்பிட்டால் கலைஞரை நவீன ராபர்ட் க்ளைவ் என்றே சொல்லலாம்.ஆனால் இருவருக்கும் வேறுபாடுகள் நிறையவே உண்டு. ராபர்ட் க்ளைவ், அல்லது அதற்குப் பிறகு நம்மை ஆண்ட பிரிட்டிஷாரோ தங்களுக்கு நம்பிக்கையாக இருந்தவர்களை அழித்ததில்லை. ஆனால், கலைஞர் விஷயமே வேறு. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்குப் போகும்போதும், அந்த ஊரிலிருந்த, தன்னோடு பழகிய பழைய திமுக நண்பர்களின் பெயர்களையெல்லாம் கண்ணீர் மல்க பட்டியிலிடுவார். உதாரணம் மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டம். மதுரையின் முன்னாள் மேயர் முத்து, பிடிஆர் பழனிவேல் ராஜன், கமபம் ராஜாங்கம், காவேரிமணியம், கம்பம் நடராஜன், போடி முத்துமனோகரன், மதுரை கிருஷ்ணன் ( இவர் தான் அழகிரியின் ஆட்களால் கொல்லப்படதாக வழக்குத் தொடரப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருஷ்ணன். இவரது இனிஷியலை சொன்னால் பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்துவிடுமாம். அதனால் அவர் சொல்லவில்லை).எஸ்.எஸ். தென்னரசு. கலைஞர் கருணாநிதி பட்டியலிட்ட அவர்களின் இன்றைய நிலை என்ன? மதுரை முத்துவின் குடும்பம் இந்தியாவிலேயே இல்லை. பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஒரே மகனும் இப்போது அமெரிக்காவில்!.மதுரை எம்ஜிஆரின் கோட்டையாக இருந்தபோது, அங்கே திமுகவின் படைவீரராக இருந்தவர் காவேரிமணியம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டபோது, அவரை தன் பிள்ளையாக பார்த்துக்கொண்டவர் காவேரிமணியம். அவர் இறந்தபின், அவரது மனைவியும், பிள்ளையும் அழகிரியைப் பார்க்கக் கூட தவம் கிடந்த கதையை மதுரை மக்கள் நன்கு அறிவீர்கள். தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம், அவரது வாரிசுகள் அரசியலுக்கு வராமல் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். இப்படி ஒரு மாவட்டத்திலும், அவர் பட்டியலிட்ட முன்னாள் திமுகவினருக்குப் பின்னால் பல சோக கதைகள் உண்டு. . தங்களுக்கு உழைத்தவர்களுக்கு சொத்தும், பரிசும் கொடுத்து மகிழ்ந்தது பிரிட்டிஷ் அரசு. ஆனால் இன்றைய `க்ளைவ்’ சாம்ராஜ்யத்தில் கட்சிக்காக பல வ்ருடங்கள் மாடாக உழைத்த உடன்பிறப்புக்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது. ஆனால் திமுகவிலிருந்து, அதிமுகவிற்குப் போய் அங்கேயும் பதவி சுகம் அனுபவித்து அவர்கள் மீண்டும் திமுகவிற்கு வந்தால் அவர்களுக்குத்தான் பதவி. உதாரணம், தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமசந்திரன், எ.வ.வேலு,அதிமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்வகணபதி, அங்கே அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷணன், கருப்பசாமிபாண்டியன், ஜெகத்ரட்சகன் இவர்கள்தான் கலைஞரின் சொத்துக்களுக்கும், அன்புக்கும் பாத்திரமானவர்கள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் சொத்துக்கள் பத்திரமாக இருந்தன. போகும்போது கூட அதை அவர்கள் எடுத்துக்கொண்டு போகவில்லை. குறிப்பாக இந்தியா விவசாய நாடு, அதன் வளங்கள் மிகவும் முக்கியம் என்று ஆங்கிலேயர்கள் கருதினார்கள். அதனால் விவசாய நிலங்களையும், விவசாயப் பயிர்களையும் பாதுகாத்தார்கள். நம்முடைய க்ளைவ் ராஜ்ஜியத்தில் நடப்பது என்ன ? தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளை நிலன்களும், வெள்ளாமையும் அழிக்கப்படுகின்றன.அதிலே அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், தனியார் மருத்துவ, பொறியியற்க் கல்லூரிகள் இவையெல்லாமே அந்தந்த மாவட்ட திமுக அமைச்சர்களுக்கு, அவர்களது பினாமிகலுக்கும் சொந்தம். மாவட்டங்களில் குடியிருப்புக்களும், நிலங்களையும் மிரட்டியே வளைத்துப் போட்டுக் கொண்டதை மக்கள் கண்ணீரோடு பார்க்கிறார்கள். மதுரை அருகேயுள்ள சீவ்ரக் கோட்டையில் அழகிரியின் மனைவி காந்தி பெயரில் எழம்பி வரும் கல்லூரி விளைநிலத்தில் அல்லவா வளர்ந்து நிற்கப்போகிறது. 5,000 வருட உலக சரித்திரத்தில், ரோமானியர்களைத் தவிர யாரும் விவசாய, வெள்ளாமை கூறுகளை அழித்ததாக வரலாறே இல்லை. அதிலும் வரலாற்று நாயகர் கலைஞர்தான். பிரிட்டிஷ் ஆட்சிக்கு கப்பம் கட்ட மறுத்ததினால்தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்கு. கப்பம் கட்டி விசுவாசமாக இருந்த குறுநில மன்னர்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி தொந்தரவு கொடுக்கவில்லை. ஆனால், இன்று மக்களை மிரட்டி அல்லவா அவர்களது சொத்துக்கள் திமுக களவீரர்களால் ஆக்ரமிக்கப்படுகிறது. உதாரணம் திருச்சி. அங்கே அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்குகிறார்கள். மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், வாடகைக்கு கூட வீடு கிடைக்காது. காரணம் இவர்களே எல்லா வீடுகளையும் வாங்கி வணிக வளாகங்களை கட்டி விடுவார்கள் என்று மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். `சதி’ என்கிற பெயரில் கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் பழக்கம் பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் இருந்தது. இதை ராஜாராம் மோகன் ராய் எதிரத்தபோது, அதற்கு தடை போட்டு பெண்களின் வாழம் உரிமையை நிலைநாட்டியது வெள்ளைக்கார அரசு. ஆனால், இவர்களது ஊடகங்களின் காட்டப்படும் பெண்களின் நிலை இன்று என்ன ? படி தாண்டுகிற பத்தினிகள்தானே இன்று இவர்களின் நெடுந்தொடர் கதாநாயகிகள். பல குடும்பபெண்கள் இந்த நெடுந் தொடர்களைப் பார்த்து மனநோயாளியாகிப் போவதுதானே உண்மை. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டார்கள். ஆனால் நம் கலாச்சாரத்தை கெடுக்கவில்லை. இன்று அத்தனை கலாச்சார சீர்கேடுகளுக்கும் பிரச்சாரம் இவர்களது ஊடகங்கள் வாயிலாகத்தானே நடக்கிறது. சினிமா, ரிகார்ட் டான்ஸ் தவிர, அறிவு பூர்வமான நிகழ்ச்சியை இந்த ஊடகங்களின் பார்க்க முடியுமா ? இன்னும் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால் இது தமிழ்நாட்டு வாக்காள குடும்பங்களின் அன்றாட பிரச்னை, பீதி. இந்தக் கொடுமைகளுக்கு மாற்று சக்தி ? கடலில் முழ்குகிறவன் எதையாவது பற்றிக்கொள்ளத்தான் துடிப்பான். அந்த `பற்று’தலுக்கான ஒரு கருவிதான் அதிமுக. இங்கே கலைஞர் குடும்பம் என்றால், அங்கே சசிகலா குடும்பம் என்று ஒப்பிடலாம். சசிகலா குடும்பம் விற்பவர்களின் பொருடகளைத்தான் வாங்குவார்கள். கலைஞர் குடும்பம் விற்க விரும்பாதவர்களின் பொருடகளையும் சொத்துக்களையும், மிரட்டியே வாங்குவார்கள். ஜெயலலிதா ஆட்சியில், அடுத்தவர்கள் தொழில்களில் தலையிடமாட்டார்கள். அதற்கான புத்தியோ, சாதுர்யமோ அவருடனிருப்பவர்களுக்கு கிடையாது, தெரியாது. தங்களைத் தவிர யாரும், எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்பதுதான் கலைஞர் குடும்பத்தின் தரக மந்திரம். இந்த தேர்தலில் இனவாதம், எம்ஜிஆர் அபிமானிகள், இலங்கை விவகாரம், 2 ஜி இதைப் பற்றியெல்லாம் திருவாளர் பொதுஜனத்திற்கு கவலையில்லை.
இனியும் திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகத்தில் இருப்பது பாதுகாப்பா? அல்லது வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்துவிடலாமா என்பதுதான் தமிழக வாக்காளர் மனதில் இன்றுள்ள கேள்வி.

Apr 5, 2011

`பெரியாரை' ஏன் கைது செய்யவில்லை ? கருணாநிதி கேள்வி

தேர்தல் களத்தில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்குள் நான்கு நாட்கள் ஒடிவிட்டது ?திமுக பிரச்சாரத்தில் பல காமெடிகள். தன்னை விட யாரும் எதிலும் முந்திவிடக்கூடாது என்பதற்காக, எதையும் செய்யக்கூடியவர் கலைஞர் கருணாநிதி.
தன் கட்சிக்காக பிரசாரம் செய்யும் காமெடியன் வடிவேலுவிற்க்கு நிறைய விளம்பரங்கள் கிடைக்கிறது. எப்போதுமே நல்ல ரேட்டிங் உள்ளவர்களைத்தான் சன் தொலைக்காட்சி பயன்படுத்திக்கொள்ளும். உடனே சன் தொலைக்காட்சி `வடிவேலுவுடன் ஒரு நாள்’ என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது. தன்னைவிட வடிவேலுவிற்கு அதிக புகழா? தாங்க முடியவில்லை கருணாநிதியால். உடனே அவரும் காமெடி செய்ய கிளம்பிவிட்டார்.


திமுகவின் முதல் பிரசாரக் கூட்டம் திருச்சியில். அந்த மாவட்டத்தில் குளித்தலையில் தான் 1957ம் ஆண்டு போட்டியிட்டதையும், அப்போது அந்த பகுதியில் தனக்கிருந்த நண்பர்களையும் பட்டியிலிட்டார். அவர் நன்றி மறக்காதவராம். அன்று இவரை முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த நண்பர்களின் குடும்ப நிலை இந்நாளில் எப்படி இருக்கிறது என்பதையும் உதாரணத்திற்கு சொல்லி இருக்கலாம். ஆனால் அடுத்த நாள் ஒரு ஆங்கில நாளிதழ் ஒரு மூதாட்டியின் படத்தை வெளியிட்டிருந்தது. அந்த மூதாட்டியின் கணவர்தான் குளித்தலையில் கருணாநிதிக்காக தேர்தலுக்கு பணம் கட்டியவர். அவர் வீட்டிலிருந்தபடிதான் அந்த பிரச்சாரத்தை நடத்தினார். அந்த மூதாட்டி வறுமையான தோற்றத்தோடு, பழைய் ஆதாரங்களோடு சர்க்யூட் ஹவுசுக்கு கருணாநிதியை பார்க்கப் போனார். அவர் விரட்டியடிக்கப்பட்ட கதை வெளியாகியிருந்தது.


இந்த தாய்க்குல செண்டிமெண்ட் காட்சி ஒருபுறமிருக்க, அங்கேதான் அவருடைய தேர்தல் பிரசார முதல் காமெடி. `தேர்தல் கமிஷன் எதிர்க்கட்சியை ஆட்சியிலே உட்கார பாடுபடுகிறது’ என்கிற நகைச்சுவையை ஆரம்பித்தார். உடனே அதற்கடுத்த நாட்களிலே தொல். திருமாவளவன் தன் பங்கிற்கு ` அதிமுக அணியில் இன்னொரு கட்சி கூட்டணி சேர்ந்திருக்கிறது. அந்தக் கட்சியின் பெயர் தேர்தல் கமிஷன்’ என்றார்.


அதற்குப் பிறகு கூட்டங்களில், தமிழகத்தில் தேர்தல் கமிஷனால் எமெர்ஜென்ஸி கட்டவிழ்த்து விடப்பட்டிருகிறது என்றார். கூடவே எமெர்ஜென்ஸி காலத்து கொடுமைகளை எப்படி தன் மகன், மருமகன் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். இந்த எமெர்ஜென்ஸி கொடுமைகளை 1975ல் நடத்தியவர் அன்றைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி. அவர் இதை ஈரோடு, சேலம் கூட்டங்களில் சொன்னார். அந்தக் கூட்டங்களில் அவருக்கு பக்கத்தில் இருந்தபடி அமைதியாக முன்னாள், இந்நாள் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர்களான .ஈ.வி.கே.எஸ். இளங்க்கோவனும், தங்கபாலுவும் கேட்டுக்கொண்டுதானிருந்தார்கள்.


தமிழக மக்கள் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளால் மகிழ்ந்து போயிருக்கிறார்கள். எல்லாக் கட்சிகளுமே தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை பாராட்டுகிறார்கள். திமுக மட்டும்தான் ஒப்பாரி வைக்கிறது. இந்த ஒப்பாரி நாடகத்தை கேளிக்கையாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..


தன் காரியம் நடக்க வேண்டுமென்றால் யாரையும் எவரையும் விமர்சனம் செய்யத் தயங்காதவர் கருணாநிதி. அவர் மூச்சுக்கு முந்நூறு முறை பெரியாரையும், அண்ணாவையும் துணைக்கு இழத்துக் கொள்வார். அந்தப் பெரியாரை மட்டும் கருணாநிதி விட்டா வைத்தார்?


பெரியாரின் திகவிலிருந்து திமுக பிரிந்துவிட்டது. 1966ம் வருடம் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர். அப்போது சட்டமன்றத்திலே மதியழகன் போலீஸ் மானியத்தின் மீது ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வருகிறார். அப்போது தமிழகத்தின் முதலமைச்சர் காங்கிரஸ் கட்சியின் திரு எம்.பக்தவத்சலம். அந்த வெட்டு தீர்மானத்தின் மீது 11.03.1966 அன்று சட்டமன்றத்திலே பேசியதன் சுருக்கம் இதுதான் :


நண்பர் திரு மதியழகன் அவர்கள் பாதுகாப்புச் சட்டதைப் பற்றி சொன்னார்கள். பத்திரிகைகள் மீது பாதுகாப்புச் சட்டம் – எழதினால், பேசினால் – முரசொலி, மாலைமணி ஆகியவற்றின் மீது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. நான் ஒரு பத்திரிகையில் வந்த வாசகத்தை அப்படியே படித்துக் காட்டுகிறேன். அதைப் படித்த பிறகு கனம் அமைச்சர் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வருமோ தெரியாது. தலைப்பு “ கம்யூனிஸ்டுகளும் நானும்’ என்பதாகும்.


“ நாளைக்கு ரஷ்யாகாரன் இந்த நாட்டின் மீது படையெடுத்தால் நான் ரஷ்யக்காரனை ஆதரித்து சுட்டுக் கொல்லப்படவோ அல்லது இந்நட்டுச் சிறையில் இருக்கவோதான் தயாராய் இருப்பேனே யொழிய காங்கிரஸ் கட்சிக்கு இந்திய தேசாபிமானத்துக்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்க சம்மதிக்க மாட்டேன். இத்தனைக்கும் நான் ஒன்பதுமாற்றுக் கம்யூனிசக்க்காரனுமல்ல ”. இத்தனையும் நான் எழதியிருந்தால் கருணாநிதியை பாளையங்கோட்டைக்கு அல்ல, பாலவனக் கோட்டைக்கே அனுப்பியிருப்பார்கள். திராவிட முன்னேற்றாக் கழகத்தினர் அத்தனைபேர்களையும் கண்காணாத தேசத்திற்கு அனுப்பியிருப்பார்கள்.எழதியது யார் ? “ நாளைக்கு ரஷ்யாகாரன் படையெடுத்தால், நான் ரஷ்யாக்காரனை ஆதரித்து சுட்டுக்க் கொல்லப்படவோ அல்லது இந்நாட்டுச் சிறையில் இருக்கவே விரும்புவேனே தவிர இந்திய தேசாபிமானத்துக்கு அடிமையாக ஒரு நிமிஷமும் இருக்கச் சம்மதிக்க மாட்டேன்’ என்று எழதியவர் – எனக்குச் சொல்ல வெட்கமாக இருக்கிறது – இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்ற பெரியார் திரு ஈ.வெ.ரா அவர்கள் 5.2.1966 “விடுதலை’ பத்திரிகையில் எழதியிருக்கிறார். பாதுகாப்புச் சட்டம் எங்கே போயிற்று ? பாதுகாப்புச் சட்டம் பெரியார் என்ற பெயரைக் கண்டவுடனே மழங்கிவிட்டதா ? அவர் காலடியில் மண்டியிட்டுவிட்டதா ?


– தேர்தலில் அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற நப்பாசை காரணமாகத்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் விடப்படிருக்கிறாதே தவிர வேறில்லை என்று பதில் கூறியிருக்கலாம். கேவலம் சில பல வோட்டுகளுக்காக இந்தை நிலைக்குப் போய்விட்டார்களே என்று கவலை தெரிவித்து இதற்கு மேல் பேச விரும்பாமல் என் உரையை முடிக்கிறேன் வணக்கம்.


இதுதான் கருணாநிதியின் சட்டமன்ற உரையின் சாராம்சம். இப்போது கலைஞர் சட்டமன்ற உரைகள் அனைத்தும் 11 தொகுப்புகளாக வெளிவந்திருக்கிறது. அதில் 3 வது தொகுப்பில் 57ம் பக்கத்தில்தான் பெரியாரின் பரம சீட்ர் கருணாநிதி பேசியது பதிவாகியிருக்கிறது.