
ஜீன் 30ந் தேதி. 2001. அப்போது தமிழகத்து முதலமைச்சர் ஜெயலலிதா. அன்று தான் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அந்த கைது சம்பவத்தை ஒரு அனுதாப அலையாக மாற்றிக் காட்டியது சன் டிவி.
தமிழகமே கொந்தளித்துவிட்ட நிலைதான். அப்போது நான் ஜெயா டிவியில் இருந்தேன். நானும் `தராசு' ஆசிரியர் ஷ்யாம் அவர்களும் இந்த கைது சம்பவத்தைப் பற்றி பேசினோம்.
நான் பேசியது இதுதான். ` சன் டிவி தன் ஜால வித்தைகளைக் காட்டி,அதன் உரிமையாளர் கலாநிதி மாறன் தாத்தாவிற்கு தன் நன்றிக் கடனை செலுத்தியிருக்கிறார். சன் டிவி என்ன திருக்குவளையில் நிலத்தை விற்று கொண்டு வந்த பணத்தில் துவங்கப்பட்டதா என்ன ? திமுக தலைவர் கட்சிக்கு நிதி வேண்டுமென்று முரசொலியில் கடிதம் எழதுவார். உடனே விசுவாச கழக உடன்பிறப்புக்கள் துண்டேந்தி எட்டணாவும் ஒரு ரூபாயுமாக பல லட்சங்களை திரட்டி கட்சிக்கு நிதி சேர்ப்பார்கள். அப்படி சேர்ந்த நிதியிலிருந்து கட்டப்பட்டதுதான் அண்ணா அறிவாலயம். பேரன் மாறன் சன் டிவி துவங்க பணம் தேவைப்பட்டது. அப்போது கட்சி நிதியிலிருந்த 8 கோடியை பணயமாக வங்கியில் கொடுத்து கடன் வாங்கி துவங்கப்பட்டதுதான் சன் டிவி. தாத்தா அறிவாலயத்தின் மாடியையே பேரனுக்கு `வாடகை'க்கு கொடுத்தார். அது என்ன வாடகை என்பது தாத்தாவுக்கும், முரசொலி மாறனுக்கும், பேரனுக்கு தான் தெரியும்.
அப்படி உருவாக்கப்பட்ட சன் டிவி துவங்கியவுடன் அதன் அதிபர் கலாநிதி மாறன் போட்ட முதல் உத்தரவே கீழே உள்ள கட்சி கரை வேட்டிகள் மாடிக்குள் நுழையக் கூடாது என்பதுதான். எந்த பேரன்களுக்காக கலைஞர் இதையெல்லாம் செய்தாரோ அதே பேரன்களால்தான் அவரது குடும்பத்திற்கே ஒரு நாள் ஆபத்தாக முடியப்போகிறது.'
இந்த பேட்டி ஜெயா டிவியில் ஜீன் 30 துவங்கி அடுத்த பல நாட்கள் ஒளிபரப்பினார்கள்.
அந்தப் பேரன்களால் வந்த ஆபத்துதான் 2007ல் நடந்த மதுரை தினகரன் எரிப்பு சம்பவம். அதற்கு பிறகு குடும்பம் பிரிந்ததும், பிறகு சேர்ந்ததும், அதற்காக கலைஞர் கண்கள் பனித்து, நெஞ்சம் இனித்த கதையெல்லாம் நாடே அறியும்.
கட்சிக்காரன் பணத்தில் தொலைக்காட்சியை துவங்கிவிட்டு அந்தக் கட்சிக்காரனையே உள்ளே அனுமதிக்கவில்லை என்பதை நான் அன்று ஒரு குற்றச்சாட்டாக சொன்னேன். அதுவே இன்று அவர்களுக்கு ஒரு சாட்சியாகிவிட்டது. 31ந்தேதி டைம்ஸ் நெள் தொலைக்காட்சியில் அலைக்கற்றை ஊழலில் தயாநிதி மாறனின் அத்துமீறலைப் பற்றி ஒரு விவாதம் நடத்தினார்கள்.
அதில் மாறன் சகோதரர்களின் ஊதுகுழலாக பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்.`சன் டிவிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்புமில்லை. கட்சிக்காரர்கள் மாடியிலுள்ள தங்கள் அலுவலகத்திற்கே வரக்கூடாது என்று உத்தரவு போட்டவர் கலாநிதி மாறன்' என்றார்.
கட்சி வேண்டும். அதில் தன் சகோதரர் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி வேண்டும். அதுவும் தங்கள் தொழிலுக்கு சாதமாக இருக்கும் பதவி வேண்டும். அதன் மூலம் ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே தங்கள் தொழிலுக்காக மட்டுமே உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும். ஆனால் ஊழல் என்று வந்தால் சன் டிவி நடுநிலையான தொலைக்காட்சி, அதற்கு திமுகவிற்கு எந்த தொடர்புமில்லை என்று சொல்வதுதான் அவர்களுடைய கார்பரேட் தர்மம்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புக்கள் அடுத்த ஐந்து வருடத்திற்காக காத்துக்கொண்டு, `சூரிய சின்னத்தை பாத்து போடுங்கம்மா ஒட்டு' என்று கோஷ்ம் போட்டு திரிய வேண்டியதுதான். நீ உழைப்பது உன் கட்சிக்காக அல்ல. கட்சித்தலைவரின் குடும்ப தொழிலுக்கு நீ கூலி பெறாத ஒரு தொழிலாளி என்பது எப்போது அவர்களுக்கு புரியும். தலைவர் குடும்பத்து உயர்மட்டக்குழ் திஹார் சிறையில் கூடும்போது உடன்பிறப்புகளுக்கு புரியவருமோ?
தமிழகமே கொந்தளித்துவிட்ட நிலைதான். அப்போது நான் ஜெயா டிவியில் இருந்தேன். நானும் `தராசு' ஆசிரியர் ஷ்யாம் அவர்களும் இந்த கைது சம்பவத்தைப் பற்றி பேசினோம்.
நான் பேசியது இதுதான். ` சன் டிவி தன் ஜால வித்தைகளைக் காட்டி,அதன் உரிமையாளர் கலாநிதி மாறன் தாத்தாவிற்கு தன் நன்றிக் கடனை செலுத்தியிருக்கிறார். சன் டிவி என்ன திருக்குவளையில் நிலத்தை விற்று கொண்டு வந்த பணத்தில் துவங்கப்பட்டதா என்ன ? திமுக தலைவர் கட்சிக்கு நிதி வேண்டுமென்று முரசொலியில் கடிதம் எழதுவார். உடனே விசுவாச கழக உடன்பிறப்புக்கள் துண்டேந்தி எட்டணாவும் ஒரு ரூபாயுமாக பல லட்சங்களை திரட்டி கட்சிக்கு நிதி சேர்ப்பார்கள். அப்படி சேர்ந்த நிதியிலிருந்து கட்டப்பட்டதுதான் அண்ணா அறிவாலயம். பேரன் மாறன் சன் டிவி துவங்க பணம் தேவைப்பட்டது. அப்போது கட்சி நிதியிலிருந்த 8 கோடியை பணயமாக வங்கியில் கொடுத்து கடன் வாங்கி துவங்கப்பட்டதுதான் சன் டிவி. தாத்தா அறிவாலயத்தின் மாடியையே பேரனுக்கு `வாடகை'க்கு கொடுத்தார். அது என்ன வாடகை என்பது தாத்தாவுக்கும், முரசொலி மாறனுக்கும், பேரனுக்கு தான் தெரியும்.
அப்படி உருவாக்கப்பட்ட சன் டிவி துவங்கியவுடன் அதன் அதிபர் கலாநிதி மாறன் போட்ட முதல் உத்தரவே கீழே உள்ள கட்சி கரை வேட்டிகள் மாடிக்குள் நுழையக் கூடாது என்பதுதான். எந்த பேரன்களுக்காக கலைஞர் இதையெல்லாம் செய்தாரோ அதே பேரன்களால்தான் அவரது குடும்பத்திற்கே ஒரு நாள் ஆபத்தாக முடியப்போகிறது.'
இந்த பேட்டி ஜெயா டிவியில் ஜீன் 30 துவங்கி அடுத்த பல நாட்கள் ஒளிபரப்பினார்கள்.
அந்தப் பேரன்களால் வந்த ஆபத்துதான் 2007ல் நடந்த மதுரை தினகரன் எரிப்பு சம்பவம். அதற்கு பிறகு குடும்பம் பிரிந்ததும், பிறகு சேர்ந்ததும், அதற்காக கலைஞர் கண்கள் பனித்து, நெஞ்சம் இனித்த கதையெல்லாம் நாடே அறியும்.
கட்சிக்காரன் பணத்தில் தொலைக்காட்சியை துவங்கிவிட்டு அந்தக் கட்சிக்காரனையே உள்ளே அனுமதிக்கவில்லை என்பதை நான் அன்று ஒரு குற்றச்சாட்டாக சொன்னேன். அதுவே இன்று அவர்களுக்கு ஒரு சாட்சியாகிவிட்டது. 31ந்தேதி டைம்ஸ் நெள் தொலைக்காட்சியில் அலைக்கற்றை ஊழலில் தயாநிதி மாறனின் அத்துமீறலைப் பற்றி ஒரு விவாதம் நடத்தினார்கள்.
அதில் மாறன் சகோதரர்களின் ஊதுகுழலாக பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்.`சன் டிவிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்புமில்லை. கட்சிக்காரர்கள் மாடியிலுள்ள தங்கள் அலுவலகத்திற்கே வரக்கூடாது என்று உத்தரவு போட்டவர் கலாநிதி மாறன்' என்றார்.
கட்சி வேண்டும். அதில் தன் சகோதரர் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி வேண்டும். அதுவும் தங்கள் தொழிலுக்கு சாதமாக இருக்கும் பதவி வேண்டும். அதன் மூலம் ஒரு தொலைபேசி இணைப்பகத்தையே தங்கள் தொழிலுக்காக மட்டுமே உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும். ஆனால் ஊழல் என்று வந்தால் சன் டிவி நடுநிலையான தொலைக்காட்சி, அதற்கு திமுகவிற்கு எந்த தொடர்புமில்லை என்று சொல்வதுதான் அவர்களுடைய கார்பரேட் தர்மம்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புக்கள் அடுத்த ஐந்து வருடத்திற்காக காத்துக்கொண்டு, `சூரிய சின்னத்தை பாத்து போடுங்கம்மா ஒட்டு' என்று கோஷ்ம் போட்டு திரிய வேண்டியதுதான். நீ உழைப்பது உன் கட்சிக்காக அல்ல. கட்சித்தலைவரின் குடும்ப தொழிலுக்கு நீ கூலி பெறாத ஒரு தொழிலாளி என்பது எப்போது அவர்களுக்கு புரியும். தலைவர் குடும்பத்து உயர்மட்டக்குழ் திஹார் சிறையில் கூடும்போது உடன்பிறப்புகளுக்கு புரியவருமோ?

தேர்தல் பரபரப்பில் புத்தகக் கடைப் பக்கம் போகவே முடியவில்லை. போனாலும் படிக்க வேண்டுமென்கிற பேராசை `பர்ஸை' புண்ணாக்கிவிடுகிறது. ஆனாலும் இந்த பேராசையை அடக்க வேண்டியதில்லை என்று பல முன்னோர்கள் சொல்லியிருப்பதால் தொடர்ந்து பேராசைப் பட்டுக்கொண்டுதானிருக்கிறேன். 


ராபர்ட் க்ளைவ் நாளை நான் வாக்களிக்கப்போகிறேன். நீங்களும் அதை செய்வீர்கள், செய்ய வேண்டும்.உங்கள் ஒரு நாள் அதிகாரத்தை நீங்கள் நழவ விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அடிமை சாசனத்தில் கையெழத்திட்டுவிட்டிர்கள் என்றுதான் பொருள். அதற்கு முன் என் வலைப்பதிவில் வாக்காளர்களுக்கு என்ன சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பெங்களூரிலிருந்து என் எழத்தாள நண்பர் அமுதவன் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அவரது இணையதளத்தில் ` கருணாநிதியா ? ஜெயலலிதாவா ? என்கிற தலைப்பில் அவர் எழதியதைப் பார்க்க சொல்லியிருந்தார். அமுதவன் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவன் நான். ஒழக்கமான எழத்திற்கும், வாழ்க்கைக்கும் சொந்தக்காரர். அப்படிப்பட்ட ஒரு மன ஒழக்கம் இருப்பதால்தான் அவர் இன்றைய தமிழக தேர்தல் களத்தை சித்தாந்த ரீதியாக அலசியிருக்கிறார். எனக்கு சித்தாந்த அறிவைவிட, யதார்த்த அனுபவம் கொஞ்சம் உண்டு. காரணம் அடிப்படையில் நான் ஒரு செய்தியாளன். தமிழகத்து தலைவர்களுக்கு என்னைத் தெரியும்.நண்பர் அமுதவனைப் போல படைப்பாற்றல் மிக்க எழத்தாளனில்லை நான். இந்த தேர்தல் என்பது கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் நடக்கும் போட்டி என்று தமிழக மக்கள் நினைக்கவில்லை. இது கருணாநிதி குடும்பத்திற்கும், தமிழக வாக்காள குடும்பங்களுக்கும் நடக்கும் போட்டி. என் இணையதளத்தில் நான் மார்ச் 14 2011ல் `தமிழகத்தில் நடக்கப்போவது தேர்தலா > சுதந்திரப்போராட்டமா என்று எழதியிருந்தேன். அதுதான் உண்மை. அன்று பிரிட்டிஷின் ராப்ர்ட் க்ளைவ், இன்று கலைஞர் கருணாநிதி. 1725ல் இங்கிலாந்தில் பிறந்த க்ளைவிற்கு படிப்பு ஏறவில்லை. ஆனால் இலக்கிய நடையும், பேச்சுத்திறனும் இருந்தது. 1924ல் திருக்குவளையில் பிறந்த கலைஞருக்கும் இந்த இரண்டு திறன்களும் உண்டு. ராபர்ட் க்ளைவ்வைப் பற்றி குறிப்பு ஒன்றில் ` கிழக்கிந்திய கம்பெனியின் படைவீரர், நிர்வாகி, அவர்தான் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் வருவதற்கு காரணமாக இருந்தார்’ என்கிறது. கலைஞரும், ஆரம்ப நாட்களில் அண்ணா போர்படையின் செயல்வீரர், நிர்வாகி. பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் ஏற்படுத்திய ராபர்ட் க்ளைவ், சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஏராளமான சொத்துக்களை சேர்த்துக் கொண்டார். இதுவும் கலைஞர் கருணாநிதிக்கு பொருந்தும். இதே ரீதியில் ஒப்பிட்டால் கலைஞரை நவீன ராபர்ட் க்ளைவ் என்றே சொல்லலாம்.ஆனால் இருவருக்கும் வேறுபாடுகள் நிறையவே உண்டு. ராபர்ட் க்ளைவ், அல்லது அதற்குப் பிறகு நம்மை ஆண்ட பிரிட்டிஷாரோ தங்களுக்கு நம்பிக்கையாக இருந்தவர்களை அழித்ததில்லை. ஆனால், கலைஞர் விஷயமே வேறு. இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு மாவட்ட தலைநகருக்குப் போகும்போதும், அந்த ஊரிலிருந்த, தன்னோடு பழகிய பழைய திமுக நண்பர்களின் பெயர்களையெல்லாம் கண்ணீர் மல்க பட்டியிலிட்டார்'. உதாரணம் மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டம். மதுரையின் முன்னாள் மேயர் முத்து, பிடிஆர் பழனிவேல் ராஜன், கமபம் ராஜாங்கம், காவேரிமணியம், கம்பம் நடராஜன், போடி முத்துமனோகரன், மதுரை கிருஷ்ணன் ( இவர் தான் அழகிரியின் ஆட்களால் கொல்லப்படதாக வழக்குத் தொடரப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருஷ்ணன். இவரது இனிஷியலை சொன்னால் பழைய விஷயங்கள் நினைவுக்கு வந்துவிடுமாம். அதனால் அவர் சொல்லவில்லை).எஸ்.எஸ். தென்னரசு. கலைஞர் கருணாநிதி பட்டியலிட்ட அவர்களின் இன்றைய நிலை என்ன? மதுரை முத்துவின் குடும்பம் இந்தியாவிலேயே இல்லை. பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஒரே மகனும் இப்போது அமெரிக்காவில்!.மதுரை எம்ஜிஆரின் கோட்டையாக இருந்தபோது, அங்கே திமுகவின் படைவீரராக இருந்தவர் காவேரிமணியம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டபோது, அவரை தன் பிள்ளையாக பார்த்துக்கொண்டவர் காவேரிமணியம். அவர் இறந்தபின், அவரது மனைவியும், பிள்ளையும் அழகிரியைப் பார்க்கக் கூட தவம் கிடந்த கதையை மதுரை மக்கள் நன்கு அறிவீர்கள். தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம், அவரது வாரிசுகள் அரசியலுக்கு வராமல் கவனமாக பார்த்துக்கொண்டார்கள். இப்படி ஒரு மாவட்டத்திலும், அவர் பட்டியலிட்ட முன்னாள் திமுகவினருக்குப் பின்னால் பல சோக கதைகள் உண்டு. .தங்களுக்கு உழைத்தவர்களுக்கு சொத்தும், பரிசும் கொடுத்து மகிழ்ந்தது பிரிட்டிஷ் அரசு. 


















